Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூலை 17 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
பால்மா வகைகளை திருடி விற்பனை செய்துவந்ததாகக் கூறப்படும் ஐந்து பேரை கல்முனைப் பிரதேசத்தில் புதன்கிழமை (15) கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டத்துக்கான பால்மா விநியோகஸ்தர் ஒருவரின் நிறுவனத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்று உடைக்கப்பட்டு, அதிலிருந்து சுமார் 100,000 ரூபாய்; பெறுமதியதான பால்மாவைக் கொண்ட பெட்டிகள் கடந்த செவ்வாய்க்கிழமை (14) திருடப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸில் அவ்விநியோகஸ்தர் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு திருடப்பட்ட பால்மா பெட்டிகளையும் முச்சக்கரவண்டியொன்றையும் கைப்பற்றியதுடன், சந்தேக நபர்களையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த சந்தேக நபர்கள்; தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளதாகவும் திருடப்படும் பொருட்களை வர்த்தக நிலையம்; ஒன்றில் விற்பனை செய்துவந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
7 hours ago
9 hours ago
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 Oct 2025