2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்தவர் கைது

Princiya Dixci   / 2015 ஜூலை 19 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்,எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று 9ஆம் பிரிவில் சட்டவிரோமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த 42 வயதுடைய நபரை நேற்று சனிக்கிழமை (18) இரவு 9 மணிக்கு கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்த 12 சாராய போத்தல்கள் மற்றும் 38 பியர் போத்தல்கள் ஆகியனவை  கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X