2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'நிச்சயம் ஆதரவு கிடைக்கும்'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 21 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

அம்பாறை மாவட்ட மக்களுடைய ஆதரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு நிச்சயம் கிடைக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை வேட்பாளர் அன்வர் எம்.முஸ்தபா தெரிவித்தார்.

மருதமுனையில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த பல வருடங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எமது பிரதேசத்தின்  அபிவிருத்தி மற்றும் முஸ்லிம் மக்களுடைய உரிமை போராட்டம் என்பன தொடர்பில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கவில்லை. அம்பாறை மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .