2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அம்பாறையில் சந்தை கட்டடத்தொகுதியில் தீ

Suganthini Ratnam   / 2015 ஜூலை 22 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை பஸ் நிலையத்தை அண்டியுள்ள சந்தை கட்டடத்தொகுதியில் செவ்வாய்க்கிழமை (21) நள்ளிரவு தீ பரவியதால், கடையொன்று எரிந்து நாசமாகியுள்ளது. இதனால், அக்கடையிலிருந்த சுமார் 100,000 ரூபாய் பெறுமதியான பொருட்கள்  எரிந்து நாசமாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இத்தீயினால் அருகிலிருந்த உபதபால் நிலையம் உட்பட சில வியாபார நிலையங்களும் சிறிய பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

தீயணைப்புப் பிரிவினரும்; பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர்.

தீ பரவியமைக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .