2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 23 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு,ரீ.கே.றஹ்மத்துல்லா

மஹிந்த ராஜபக்ஷவின்; ஆட்சியி காலத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட  கொடுமைகளுக்கு இந்த தேர்தலின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக தீர்வினைப் பெற்றுக் கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.இதற்கு நடைபெறவுள்ள  நாடாளுமன்ற தேர்தலை சிறந்த வாய்ப்பாக தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டும் என வேட்பாளர் அரியநாயகம் சந்திரநேரு சந்திகாந்தன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திற்கான அவரது தேர்தல் காரியாலயத்தினை நேற்று புதன்கிழமை திருக்கோவிலில் திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'சிறுபான்மை மக்களால் தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்து அவர்களை பலி தீர்த்துக் கொள்வதற்காகவே துடித்துக் கொண்டு இருக்கின்றார்.இதனை நினைவில் கொண்டு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்' என்றார்

'மேலும், என்னையும் ஆதரித்து தொடர்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஆணையினை அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் வழங்க வேண்டும'; எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .