2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மு.கா. ஆதரவாளர்கள் 15 பேர் தேசிய காங்கிரஸில் இணைவு

Thipaan   / 2015 ஜூலை 23 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஆதரவாளர்கள் 15 பேர், தேசிய காங்கிரஸ§டன் புதன்கிழமை (22) இணைந்து கொண்டனர்.

தேசிய காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவுடன் இணைந்து கொண்ட இவர்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும் வெற்றிக்காகவும் உழைக்கப் போவதாகவும் உறுதியளித்தனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, அதன் அம்பாறை மாவட்ட ஆதரவாளர்களை புறக்கணித்து செல்வதாகவும், அதன் தலைமைத்துவம் சுயநலத்துடன் செயற்பட்டு வருவதாகவும் தேசிய காங்கிரஸில் இணைந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .