2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

திருக்கோவிலில் இரண்டு உள்ளூர் துப்பாக்கிகள் மீட்பு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 23 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் கிராமத்திலுள்ள வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு உள்ளூர் துப்பாக்கிகளை புதன்கிழமை (22) மாலை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்படி கிராமத்துக்குச் சென்று இந்த துப்பாக்கிகளை கைப்பற்றியதாக தெரிவித்த பொலிஸார்,  துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட வீட்டில் எவரும் வசிக்கவில்லை என்றும் கூறினர்.
மிருக வேட்டைக்கு பயன்படுத்தப்படுவதற்காக இந்தத் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .