2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீவள்ளிபுரக் கிராமத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 24 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-.ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  ஸ்ரீவள்ளிபுரக் கிராமத்திலுள்ள மக்கள், தற்போது நிலவும் வரட்சி காரணமாக குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.  

ஸ்ரீவள்ளிபுரக் கிராமத்தில் வனக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் 1990ஆம் ஆண்டு குடியேறியிருந்தனர். பின்னர், யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த இக்கிராமவாசிகள், 2004ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்ட  நிலையில் தற்போது 82 குடும்பங்கள் அங்கு  வாழ்ந்துவருகின்றன.

கிணறுகள் வெட்டமுடியாத நிலப் பிரதேசமாக இக்கிராமம் உள்ளதாகத் தெரிவித்த ஸ்ரீவள்ளிபுரக் கிராமவாசிகள், ஒவ்வொரு வருடமும்  கோடை காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டை தாம் எதிர்நோக்கி வருவதாகவும் கூறுகின்றனர்.  

திருக்கோவில் பிரதேச சபையினால் இக்கிராமத்தில் 1,000 லீற்றர் கொள்கலன் ஒன்றும் 2,000 லீற்றர் கொள்கலன் ஒன்றும் வைக்கப்பட்டு,   பவுசர் மூலம் வாரத்துக்கு இரண்டு முறைகள் நீர் விநியோகிக்கப்படுதாகவும் இவ்வாறு விநியோகிக்கப்படும் நீர் போதுமானதாக இல்லை எனவும் கிராமவாசிகள் கூறுகின்றனர்.  

இது தொடர்பில்  திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபனிடம் கேட்டபோது, இக்கிராமத்துக்கு எமது பிரதேச சபையினால்  பவுசர் மூலம் குடிநீர் வழங்கப்படுகின்றது. இவ்வாறு வழங்கப்படும் நீர் போதுமானதாக இல்லையெனத் தெரிவித்த நிலையில், இது தொடர்பில்  அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கலந்துரையாடினோம். இந்நிலையில்,  எதிர்வரும் வாரம் முதல்  மேலதிகமாக நீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' எனவும் தெரிவித்தார்.

மேலும், இக்கிராமத்துக்கு நிரந்தரமாக குடிநீர் வசதியை ஏற்படுத்திக்கொடுக்கும் முகமாக ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ், நீர்வழங்கல்; வடிகாலமைப்புச் சபையூடாக குழாய்நீர் விநியோகத் திட்டத்துக்கான வேலைத்திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .