2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'மு.கா.ஊடாகவே கிடைக்கும்'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 24 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-.பைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைப்பதாக இருந்தால் அது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடாகத்தான் கிடைக்கும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை தேர்தல் காரியாலயத்தில் புதன்கிழமை(22) இரவு நடைபெற்ற கூட்டத்திலேயே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இம்முறை அம்பாறை மாவட்ட மக்கள் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை வித்தியாசமான முறையில் எதிர்நோக்க வேண்டியுள்ளது. அதற்காக நீங்கள் அனைவரும் என்னுடன் இணைந்து செயற்பட்டால்தான் எமது கட்சியையையும் வேட்பாளர்களையும் வெற்றிபெற செய்ய முடியும்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை இம்முறை அம்பாறை மாவட்டத்துக்கான தேசியப் பட்டியலை எமது பிரதேசத்துக்கு வழங்க தீர்மானித்துள்ளது. நீங்கள் இதை ஏற்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதன் மூலம் எமது அரசியல் அதிகாரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .