2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தேர்தல் கடமைகளில் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களையும் இணைத்துக்கொள்ளவும்

Princiya Dixci   / 2015 ஜூலை 24 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.ரஹ்மத்துல்லா

நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலுக்கான தேர்தல் கடமைகளில், அம்பாறை மாவட்டத்திலுள்ள அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களையும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்க்கொள்ளுமாறு அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சங்கம், மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 
 
அச்சங்கத்தின் சார்பாக அதன் செயலாளர் ஜனாப்.எஸ்.ஆப்தீன், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.துஷித பி.வணிகசிங்கவுக்கு அனுப்பியுள்ள முறையீட்டு மனுவில் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
 
மேலும், அம்மனுவில் இம்மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரச சேவையில் கடமையாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களை முழுமையாக இணைத்துக் கொள்ளுவதற்கான நடவடிக்கை மேற்க்கொள்ளப்படவில்லை என்பதனை சுட்டிக்காட்டியுள்ளதுடன், தற்போது நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கடமையாற்றுவதற்காக அந்தந்த நிறுவனங்களுடாக விண்ணப்பித்துள்ள அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு, அவர்களை தேர்தல் கடமையில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்க்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .