2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண இளைஞர் பாரம்பரிய கரையோர நடைப்பயணம்

Princiya Dixci   / 2015 ஜூலை 24 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

'கிழக்கு மாகாண இளைஞர் பாரம்பரிய கரையோர நடைப்பயணம்' எனும் தொனிப்பொருளில் பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவு மாணவர்கள் மேற்கொண்ட 10 நாட்கள் வடக்கு, கிழக்குச் ஆய்வுச் சுற்றுலாவுக்கு வருகை தந்த குழுவினர், தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்துக்கு நேற்று வியாழக்கிழமை (23) விஜயம் மேற்கொண்டனர்.

இம்மாணவர் குழுவினரை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், பதிவாளர் எச். அப்துல் சத்தார் ஆகியோர் வரவேற்றனர். விஜயம் செய்த குழுவினர் பல்கலைக்கழக சுற்றுச் சூழலை பார்வையிட்டதோடு கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

நாலக்க எல்லதெனியா தலைமையிலான 09 பேரை உள்ளடக்கிய இக்குழுவினர் கடந்த ஜூலை 14ஆம் திகதி தமது பயணத்தை வடக்கு நோக்கி ஆரம்பித்தனர். 

அங்கு வரலாற்றுப் பாரம்பரிய இடங்களை பார்வையிட்டு திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து வரலாற்று இடங்களைப் பார்வையிட்டுள்ளனர்.

இக்குழுவினருக்கு பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட சகல தரப்பினரும் உதவி வழங்கியதாக குழுவின் தலைவர் நாலக்க எல்லதெனியா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .