Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 24 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு
திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவின் தம்பட்டை பிரதேசத்தில் அரச உத்தரவாத விலையில் நெல்கொள்வனவை மேற்கொள்வதற்கான நெற் களஞ்சியசாலை இன்று வெள்ளிக்கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட நெற்செய்கையாளர்கள் தங்களது விளைச்சல் நெல்லினை சந்தைப்பபடுத்துவதில் இருந்து வந்த பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வகையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரச உத்தரவாத விலையில் இங்கு விவசாயிகள் தங்களது விளைச்சல் நெல்லினை சந்தைப்படுத்த முடியும்.
இக்களஞ்சியசாலையில் 60,000 மூடைகளை அதாவது 30 இலட்சம் கிலோகிராம் நெல்லினை களஞ்சியப் படுத்த முடியுமென களஞ்சிய பொறுப்பாளர் டபிள்யூ.வீ. அனுரகுமார தெரிவித்தார். இதன்போது உத்தரவாத விலையில் நெல்கொள்வனவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஏ.எம்.அமீர், நெற்சந்தைப்படுத்தல் சபையின் அம்பறை மாவட்ட பிராந்திய முகாமையாளர் கே.ரத்னாயக்க, திருக்கோவில், ஆலையடிவேம்பு, அ;கரைப்பற்று பிரதேசங்களின் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
51 minute ago
2 hours ago