Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 25 , மு.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
தூய்மையான தலைவர்களுடன் மாத்திரம் அரசியல் செய்யக்கூடிய சம்பிரதாயத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.அப்துல் மஜீட், நேற்று வெள்ளிக்கிழமை (24) தெரிவித்தார்.
அவரது இல்லத்தில் நேற்றுஇடம்பெற்ற கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் தூய்மையான ஒரு தலைவர் அவரின் கட்சியில் இணைந்து நான் போட்டியிடுவது ஒரு அதிர்ஷ்டம் என்றே நினைக்கின்றேன்.
அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது கட்சியை விட நாட்டையும் நம் இன மக்களையும் பற்றியே சிந்திக்க வேண்டும்.
கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி நாங்கள் பாரிய வெற்றியைப் பெற்றுக் கொண்டோம். இதன் மூலம் நாட்டின் பெரும் மாற்றமொன்றையும் கண்டிருக்கின்றோம். இவ்வாறு எமது ஊரிலும் ஒரு மாற்றத்தை நாம் கொண்டு வர வேண்டும்.
அரசியல் அநாதையாக இருக்கும் பொத்துவில் ஊருக்கு ஒரு நாடாளுமன்ற பிரதிநிதியை தெரிவு செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இந்த வாய்ப்பை பொத்துவில் மக்கள் பயன்படுத்தி ஒற்றுமையுடன் வாக்களிக்க வேண்டும். இதன் மூலம் எனக்கு கிடைக்கப்பெறும் வெற்றி பொத்துவில் மக்களின் வெற்றியாக அமையும் என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago