2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.க.வின் தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல்

Princiya Dixci   / 2015 ஜூலை 25 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார் 

அம்பாறை, மிஹிந்தபுரத்தில் அமைந்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகம் மீது நேற்று வெள்ளிக்கிழமை (24) அதிகாலை இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.
 
இத்தாக்குதலில் அலுவலகத்தின் முன்பாக வைக்கப்பட்டிருந்த பதாதைகள் தீயினால் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அலுவலகத்துக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. 
 
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் முதன்மை வேட்பாளருமான தயாகமகே, 'இவ்வாறான எந்த செயல்களாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியைத் தடுக்க முடியாது. மாறாக வெற்றியையே வலுப்படுத்தும்' என்றார்.
 
மேலும், குண்டர்களினால் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் பெரிதுபடுத்தாமல் அமைதியை கடைப்பிடிப்பதுடன் ஜனநாயக வழிமுறையை பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.
 
தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .