2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யானை தாக்கி ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 30 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை, சாகாமம் பகுதியில் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று, மகாசக்திபுரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான வெள்ளக்குட்டி இராஜேந்திரன் என்பவரே யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

வழமைபோன்று சாகாமம் தோணிக்கல் கண்டப்பகுதியில் வயல்வெளி காவல் கடமையில் ஈடுபட்டிருந்தபொழுதே இவர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .