Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூலை 30 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாந்திபுரம் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட மின்சார இணைப்பு வேலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.
1970ஆம் ஆண்டு குடியேற்றம் செய்யப்பட்ட இக்கிராம மக்களுக்கான மின்சாரம் வழங்கும் வேலை, கடந்த வருட இறுதிப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தில் மின்கம்பங்களை மாத்திரம் நாட்டிய நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின் இணைப்புக்கான உபகரணங்களும் கைவிடப்பட்ட நிலையில் ஒப்பந்தக்காரர்கள் வேலைத்திட்டத்தை இடைநிறுத்திச் சென்றுள்ளனர்.
மின் இணைப்பு வேலை இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியபோதிலும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை எனவும் அக்கிராம மக்கள் கூறினர்.
எனவே, இக்கிராமத்துக்கு மின் இணைப்பை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் வியாழக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கையில், 'சாந்திரபுரம் கிராமத்துக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான வேலைத்திட்டம் விரைவில் மேற்கொள்ளப்படும்' எனவும் தெரிவித்தன.
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago