2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இந்தியப் பிரஜைக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா  

சுற்றுலா வீஸாவில் வந்து வேளாண்;மை அறுவடை செய்யும் இயந்திரத்தில் சாரதியாக பணி புரிந்த குற்றச்சாட்டின் பேரில் அம்பாறை, சவளக்கடை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜை ஒருவருக்கு கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி கே.பேரின்பராஜா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் இன்று செவ்வாய்க்கிழமை விதித்துள்ளார்.

சந்தேக  நபரை கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி கே.பேரின்பராஜா முன்னிலையில் ஆஜர் செய்தபோதே, இவருக்கு மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபரை நேற்று திங்கட்கிழமை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .