2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

இந்தியப் பிரஜைக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா  

சுற்றுலா வீஸாவில் வந்து வேளாண்;மை அறுவடை செய்யும் இயந்திரத்தில் சாரதியாக பணி புரிந்த குற்றச்சாட்டின் பேரில் அம்பாறை, சவளக்கடை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜை ஒருவருக்கு கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி கே.பேரின்பராஜா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் இன்று செவ்வாய்க்கிழமை விதித்துள்ளார்.

சந்தேக  நபரை கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி கே.பேரின்பராஜா முன்னிலையில் ஆஜர் செய்தபோதே, இவருக்கு மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபரை நேற்று திங்கட்கிழமை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X