2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வயல்களில் வைக்கோல் எரியூட்டப்படுவதாக குற்றச்சாட்டு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை, சவளக்கடை விவசாய கேந்திர நிலையத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மை அறுவடை முடிவடைந்த வயல்களில் இருந்த வைக்கோல் இனந்தெரியாதோரினால்; எரியூட்டப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

வைக்கோல் எரியூட்டப்படுவதால் புகை மண்டலம் ஏற்படுவதாகவும்  இதன்; சாம்பல் வீடுகளில் படிகின்றது.  இதனால், பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

வயல்களிலுள்ள வைக்கோலை எரியூட்டுவதனால்,  புற்கள் கருகுவதாகவும் இதனால், தீனியின்றி கால்நடைகள்  அலையும் அசௌகரியத்துக்கு உள்ளாகும் நிலைமை ஏற்படும் என்றும் கால்நடை வளர்ப்போர் தெரிவித்தனர்.

இனந்தெரியாதோரினால் வைக்கோல் எரியூட்டப்படுகின்றமை தொடர்பில் சவளக்கடை விவசாய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வ.விநோதனிடம்  நேற்று திங்கட்கிழமை கேட்டபோது, 'வயல்களில் வைக்கோலை எரியூட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு யாராவது வைக்கோலை எரியூட்டுவது கண்டுபிடிக்கப்படுமாயின், அவர் கைதுசெய்யப்பட்டு பிரதேச பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவதுடன், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்' என்று தெரிவித்தார்.

மேலும், வைக்கோலை வயல்களில் முறையாக பாவித்து சிறந்த விளைச்சலை பெறுவதற்கான வழிவகைகளை விவசாயிகளுக்கு தெளிவுபடுத்துமாறு பிரதேச விவசாயப் போதனாசிரியர்களுக்கு தான் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .