Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே. றஹ்மத்துல்லா
வெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கைப் பிரஜைகளுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதுடன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான வசதியை ஏற்படுத்தமுடியாது போனால் அத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் எனவும் இலங்கை இடம்பெயர் தொழிலாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான மகஜரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அதிகாரியிடம் இலங்கை இடம்பெயர் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் றசீட் ஜஃபர் தலைமையிலான குழுவினர் நேற்று திங்கட்கிழமை கையளித்தனர்.
இதன் பின்னர் இலங்கை இடம்பெயர் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் றசீட் ஜஃபர் ஊடங்களுக்கு தெரிவிக்கையில், 'தற்போது இலங்கையைச் சேர்ந்த 20 இலட்சத்துக்கும் அதிகமான பிரஜைகள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் பல வருடங்களாக நாட்டில் இடம்பெற்றுவரும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றமையானது அடிப்படை மனித உரிமை மீறல் ஆகும்' எனத் தெரிவித்தார்.
'இவ்வாறு வெளிநாடுகளில் வசித்துவரும் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாட்டவர்களுக்கு அவர்கள் வசித்து வரும் நாடுகளில் இருந்துகொண்டு வாக்களிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையைச் சேர்ந்த 20 இலட்சம் பிரஜைகள் என்பது இந்த நாட்டின் ஆட்சி, அதிகாரத்தை தீர்மானிக்கின்ற பெரியதொரு சமூகமாகும். எனவே, இந்த சமூகத்தையும் இலங்கை பிரஜைகளாக ஏற்றுக்கொள்வதாயின், அவர்களுக்கான வாக்களிக்கும் உரிமையையும் இந்த நல்லாட்சிக்கான அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்' அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
3 hours ago
3 hours ago