2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு

Thipaan   / 2015 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று பொத்துவீல் வீதி  காஞ்சிரம்குடா சந்திப்பகுதியில் நேற்று  திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற  மோட்டார் சைக்கிள்  விபத்தில் படுகாயமடைந்து ஆபத்தான  நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நபர்  உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கிராம சேவையாளராக கடமையாற்றும் 42 வயதுடைய ப.பத்மநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

எதிர்பாராத விதமாக வீதியில் குறுக்கிட்ட  மாடு ஒன்றில் மோதியதாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது என ஆரம்பக்கட்ட விசாரனையிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த நபர், திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .