2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

அட்டாளைச்சேனையில் நாளை அ.இ.ம.காங்கிரஸின் பிரசாரக் கூட்டம்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம், நாளை வியாழக்கிழமை (13) மாலை 4.30 மணிக்கு அட்டாளைச்சேனை பிரதான வீதியில் நடைபெறவுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் ஏ.சீ.எம் சமீர் ஹாஜியாரை ஆதரித்து இப்பிரச்சாரக்கூட்டம் நடைபெறவுள்ளது. 

கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகவும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.அமீர் அலி மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளதுடன், கட்சியின் முக்கியஸ்தர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும் இதில் கலந்துகொள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .