Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 13 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு, ரீ.கே.றஹ்மத்துல்லா
வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் உறவு உறுதியாக அமையவேண்டும். இதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் அம்பாறை மாவட்டத்தில் நான் முன்மாதிரியாக ஈடுபடுவதுடன் ஏனைய தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்களும் ஈடுபட வேண்டும் என அம்பாறை மாவட்ட வேட்பாளர் கவீந்திரன் கோடிஸ்வரன் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்,முஸ்லிம் மக்கள் கருத்தொற்றுமை ரீதியாக அரசியல் தீர்வுகளில் ஒரு நல்லிணக்க அடிப்படையில் பிரச்சினைகளை கையாளுகின்ற போதுதான் தமது அப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.நாம் தொடர்ந்து பிரிவினைகளையும் பிரதேச வாதத்தையும் பேசிக்கொண்டு இருப்போமேயானால் அது பேரினவாத சக்திகளின் பிரித்தாளும் தந்திரத்துக்கு தூபம் இடுவது போன்று அமைந்துவிடும்.
இதனை கருத்தில் கொண்டு நாம் அனைவரும் ஒற்றுமைப்பட்டு பேரினவாத அரசியல் சக்திகளுடன் பேரம் பேசும் சக்தியாக மாறவேண்டும் என்றார்.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago