Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
தேர்தல் சட்டங்களை மீறி துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த வளத்தாப்பிட்டியை சேர்ந்த 4 பேரை சனிக்கிழமை(15) இரவு கைது செய்துள்ளதாக தெரிவித்த சவளக்கடை பொலிஸார், அவர்கள் பயணித்த வானையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.
சவளக்கடை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த இரகசிக தகவலையடுத்து சாளம்பைக்கேணி- 05ஆம் கொளனி பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையையும் சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jun 2025
21 Jun 2025