2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

தொற்றா நோய்களுக்கான சிகிச்சை தினம் மாற்றம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த தொற்றா நோய்களுக்குரிய சிகிச்சை, வியாழக்கிழமை (20) நடைபெறும் என்று அந்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் பொதுத் தேர்தல் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில் இந்த வைத்தியாசலையில் தொற்றா நோய்களுக்காக சிகிச்சை பெற்றுக்கொள்வோரில் அதிகளவானோர் வெளிப் பிரதேசங்களிலிருந்தே வருகை தருகின்றனர்.

எனவே, இன்றையதினம் நடைபெறவிருந்த தொற்றா நோய்களுக்குரிய சிகிச்சையை வியாழக்கிழமைக்கு (20) மாற்றம் செய்ய வேண்டி ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் தொற்றா நோய்களுக்குரிய சிகிச்சை மாதத்தில் ஒரு தடவை நடைபெறுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .