2025 ஜூன் 21, சனிக்கிழமை

சிலைகளை அகற்றுமாறு உத்தரவு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் மைதானம் மற்றும் பஸ் தரிப்பு நிலையத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த காணியில் இனந்தெரியாதோரினால் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றுமாறு பொத்துவில் நீதிவான் நீதிமன்ற நீதவான் பயாஸ் றஸாக் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொத்துவில் பிரதேச செயலாளாரினால் பொத்துவில் பிரதேச சபைக்கு வழங்கப்பட்ட இந்தக் காணியில் இனந்தெரியாதோரினால் திங்கட்கிழமை (17) இரவு  கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சீமெந்துக்கட்டின் மீது இரு மதங்களைப் பிரதி பலிக்கும் வகையிலான சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக  பொத்துவில் பிரதேச செயலாளரினால் நேற்றையதினம் முறைப்பாடு செய்யப்பட்டதாக  பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த முறைப்பாட்டை அடுத்து, பொத்துவில் நீதிமன்றத்துக்கு பொலிஸார் தெரிவித்தமைக்கு அமைய இது தொடர்பில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .