Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 21, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்புக் காரணமாக சுமார் எட்டு ஹெக்டேயர் தென்னந்தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதனால், 50 இலட்சத்துக்கும் மேல் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தென்னந்தோட்ட உரிமையாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
ஒலுவில் துறைமுகத்திலிருந்து நிந்தவூரின் தெற்குத் திசை நோக்கி சுமார் 10 கிலோமீற்றர் தூரத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடல் நீர் கரையை நோக்கி சுமார் 200 மீற்றர் தூரத்துக்கு வருகின்றது. இந்த நிலையில், தென்னை மரங்கள் கடல் நீரினால் அடித்துச்; செல்லப்படுகின்றன.
அத்துடன், இந்தக் கடல் அரிப்புக் காரணமாக மீன்பிடி வள்ளங்கள் நிறுத்துவதற்கான இடம் இல்லாமல் போயுள்ளதுடன், சுமார் 30 மீனவர் வாடிகளும் சேதமடைந்துள்ளன.
இப்பிரதேசத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாக காணப்பட்ட வெளிச்சவீட்டுப் பிரதேசமும் கடல் நீரினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. எனவே, கடல் அரிப்பை பூரணமாகக் கட்டுப்படுத்த வேண்டுமாயின், கடற்கரையோரத்தில் கருங்கற்களைக் கொண்ட வேலி அமைக்கப்பட வேண்டும்.
மேலும், தங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கையை உரிய அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று கடல் அரிப்பினால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள தென்னந்தோட்ட உரிமையாளர்களும் மீனவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தக் கடல் அரிப்பு விடயம் தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபாவிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கேட்டபோது, 'கடல் அரிப்புக்குள்ளான கடற்கரையோரத்தில் கருங்கற்களினால் வேலி அமைத்து கடல் அரிப்பை தடுப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும்' எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jun 2025
21 Jun 2025