2025 ஜூன் 26, வியாழக்கிழமை

3 தசாப்தங்களின் பின்னர் அக்கரைப்பற்றில் நெல் கொள்வனவு

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 23 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

நெல் சந்தைப்படுத்தும் சபையின் புதிய களஞ்சியசாலையொன்று 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டதோடு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவும் இடம்பெற்றது.

நெற் சந்தைப்படுத்தும் சபையின் அம்பாறை மாவட்ட பிராந்திய முகாமையாளர் ஆர்.எம்.ஏ.ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அக்கரைப்பற்று பிரதேசசபை உதவித் தவிசாளர் ஐ.எல்.ஏ.ஹக்கீம், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.வை.சலீம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீஸன், உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சின் இணைப்பு செயலாளர் ஏ.பி.தாவூத், கல்லோயா வலதுகரை வாய்க்கால் விவசாயிகள் சம்மேளனத் தலைவர் எம்.ஐ.எம்.அபூபக்கர் மற்றும் சம்மேளத்தின் வதிவிட திட்ட முகாமையாளர் எஸ்.எல்.ஏ.அன்சார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நெற் சந்தைப்படுத்தும் சபையின் மேற்படி களஞ்சியசாலையினூடாக ஒவ்வொரு விவசாயியிடமிருந்தும் 2ஆயிரம் கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்படும் என சபையின் பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.

சம்பா ஒரு கிலோகிராம் 30 ரூபாய், நாடு  ஒரு கிலோகிராம் 28 ரூபாய் எனும் விலைகளின் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது. ந்நெற் சந்தைப்படுத்தும் சபையினரின் மேற்படி களஞ்சியசாலையில் மொத்தமாக 2ஆயிரம் மெற்றிக்தொன் (20 லட்சம் கிலோகிராம்) நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள விவசாயிகளிடமுள்ள நெல்லினைக் கொள்வனவு செய்வதற்காக– அரசாங்கம் - நெற்சந்தைப்படுத்தும் சபையினருக்கு 1000 மில்லியன் ரூபாவினையும், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு 100 மில்லியன் ரூபாவினையும் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0

  • செம்பகம் Friday, 24 February 2012 02:54 PM

    அக்கரைப்பற்று பிரதேசசபை உதவித் தவிசாளர் ஐ.எல்.ஏ.ஹக்கீம் எடுத்துக் கொண்ட அல்லது ஊடகங்கள் வாயிலாக மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இது மேற் கொள்ளப்பட்டுள்ளது என்பது உண்மை. எதுவாகயிருந்தாலும் விவசாயிகள் நன்மையடைந்துள்ளனர். அதற்கு எனது வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .