2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

'50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் கஞ்சிகுடியாறு, தங்கவேலாயுதபுரம், சாகாமம் கிராமங்களுக்கும் வீடுகள்'

Kogilavani   / 2012 மே 27 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


இந்திய உதவியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள கஞ்சிகுடியாறு, தங்கவேலாயுதபுரம் மற்றும் சாகாமம் பிரதேசங்களுக்கு கணிசமானதொரு தொகை வீடுகள் வழங்கப்படும் என்று இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே.காந்தா உறுதியளித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்திய அரசினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 7 முச்சக்கர வண்டிகளை வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட உரையாற்றும்போதே இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா இதனை தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன, கிழக்கு மாகாண அமைச்சர் ரி.நவரட்ணராஜா, ஆலையடி வேம்பு பிரதேசசபைத் தவிசாளர் கே.ரத்தினவேல், உப தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் ரி. நவரட்ணராஜா ஆகியோர் அம்பாறை மாவட்டத்திலுள்ள மேற்படி தமிழ் பிரதேசங்களுக்கு ஒரு தொகுதி வீடுகளை வழங்குமாறு இந்திய உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி 50 ஆயிரம் வீடுகளில் கிழக்கு மாகாணத்துக்கு 4 ஆயிரம் வீடுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0

  • riyal Sunday, 03 June 2012 01:26 PM

    நல்லது நடந்தா சரி வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .