2025 ஜூன் 26, வியாழக்கிழமை

6 பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக்கான உத்தேசத் திட்டங்கள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 20 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தில்  இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் தேசிய திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 6 தமிழ் பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக்காக 600 கோடி ரூபா செயல்த் திட்டங்களுக்கான உத்தேசத் திட்டங்களை அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளதாக கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் கலாநிதி துரையப்பா நவரெட்ணராஜா தெரிவித்தார்.

தேசத்திற்கு மகுடம் தேசிய திட்டத்தின் கீழ் அபிவிருத்தித் திட்டத்திற்கான திட்டங்களை வழங்குமாறு  மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் உத்தேசத் திட்டங்களை கையளித்துள்ளார்.

கடந்த 30 வருடகால யுத்தத்தினால் தமிழ் மக்கள் இழந்த கல்வி, வீதி, சுகாதாரம், விவசாயம், போன்றவற்றை மீளக்கட்டி எழுப்புவதற்கான பல திட்டங்கள் வகுக்கப்பட்டு அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கல்முனை, ஆலையடிவேம்பு, திருக்கோவில், நாவிதன்வெளி, காரைதீவு, சம்மாந்துறை பிரதேசங்களில் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் கலாநிதி துரையப்பா நவரெட்ணராஜா குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .