2025 மே 05, திங்கட்கிழமை

அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு பயணித்த 48 பேர் கைது

Editorial   / 2021 மே 31 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்பாறை- அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி, பஸ்ஸொன்றில் வந்துகொண்டிருந்த 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்கினியாகல- நாமல்ஓயா பிரதேசத்தில் வைத்து நேற்றிரவு (30) பஸ்ஸை வழிமறித்த பொலிஸார், பஸ்ஸில் பயணித்த சகலரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் உள்ளிட்ட 48 பேரையும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X