2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் தேவைகளை பூர்த்தியாக்கவும்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நவீன ஆய்வுகூடம், பற்சிகிச்சைப்பிரிவு மற்றும் கதிரியக்கப்பிரிவை ஏற்படுத்தித் தருமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை தள ஆயுர்;வேத வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இவ்வைத்தியசாலையில் ஆய்வுகூடம், பற்சிகிச்சைப்பிரிவு, கதிரியக்கப்பிரிவு என்பன இல்லாமையினால்; நோயாளர்கள் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே, இவ்வைத்தியசாலையில் காணப்படும் இத்தேவைப்பாடுகளை சுட்டிக்காட்டி அவற்றை  நிவர்த்திசெய்து தருமாறு கோரி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு புதன்கிழமை (16) கடிதம் அனுப்பப்பட்டதாக அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியசர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X