2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி எருமை மாடுகளை கொண்டு சென்றவருக்கு அபராதம்

Niroshini   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

சட்டவிரோதமாக சிறிய ரக உழவு இயந்திரத்தில் இரண்டு எருமை மாடுகளை கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி இன்று (18) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

அம்பாறை, அக்கரைப்பற்று, பட்டியடிப்பிட்டி பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை, சட்டவிரோதமாக சிறிய ரக உழவு இயந்திரத்தில் இரண்டு எருமை மாடுகளை கொண்டு சென்ற நபர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த நபரை கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபரை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி முன்னிலையில் ஆஜர்செய்தபோதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X