2025 ஜூலை 02, புதன்கிழமை

அம்பாறையில் கடும் மழை: குளத்தின் அணை சேதம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வசந்த சந்திரபால

அம்பாறை மாவட்டத்தில் 23ஆம் திகதி பெய்த அடை மழை காரணமாக  அம்பாறை தமன பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தொட்டகம வெல்கெடிய குளத்தின் அணை உடைந்துள்ளது.

இதனால் 250ஏக்கர் வயல் காணி பகுதியளவிலும் 10 ஏக்கர் காணி முழுமையாகவும் நீரில் மூழ்கியுள்ளன.

60வருடம் பழமை வாய்ந்த இக்குளக்கட்டு உடைந்துள்ளதால் இதனை புனரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை முன்வரவில்லை.

எனவே,தற்காலிக அணையொன்றை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கைவிடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .