Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
அம்பாறை , நாமல் ஓயா பகுதியில் உள்ள கராண்டுகல உப பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரினால் துப்பாக்கிச் சூடு ஞாயிற்றுக்கிழமை (4) அதிகாலை 2.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் இக்கினியாகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி மற்றும் மாமி ஆகியோர் உயிரிழந்ததுடன் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 33 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் தனது துப்பாக்கியினால் சுட்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொனராகலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிற்குள் உள்ளடங்கும் கராண்டுகல உப பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் குடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்றுள்ளதா அல்லது இதர காரணங்களினால் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
பாறுக் ஷிஹான்
13 minute ago
28 minute ago
46 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
28 minute ago
46 minute ago
50 minute ago