2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் யோசனைகளை முன்வைக்கும் அமர்வு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில்; பொதுமக்கள் யோசனைகளை முன்வைக்கும் குழுவின் அம்பாறை மாவட்டத்துக்கான அமர்வு நாளை சனிக்கிழமையும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை அம்பாறை மாவட்டக் கச்சேரியில் நடைபெறவுள்ளது.  

அரசியலமைப்புச் சீர்திருத்தம்; தொடர்பில் மக்களிடமிருந்து வாய்மொழி மற்றும் எழுத்துமூல சமர்ப்பணங்களை பெறுவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் யோசனைக்குழுவின் செயற்பாடாகும்.

அமைச்சரவை அங்கிகாரத்துடன் 20 உறுப்பினர்களை கொண்டதாக  அமைக்கப்பட்ட இந்தக் குழு, பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து அறிக்கையையும்  சிபாரிசுகளையும் தயாரித்து அமைச்சரவை உப குழுவுக்கு சமர்பிக்கும்.

பொதுமக்கள் மேலதிக தகவல்களை 0112437676 0773868563 என்ற தொலைபேசி இலக்கங்கள், 0112328780 என்ற தொலைநகல் இலக்கம், தபால் மூலமாகவும் பெற்றுக்கொள்ளமுடியும்.

மேலும், தவிசாளர் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழு செயலகம், விசும்பாய ஸ்ரேபிள்ஸ் வீதி கொழும்பு -02 என்ற முகவரியிலும்; தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X