2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஆற்று மண் ஏற்றியவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா
 

அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் அனுமதிப்பத்திரத்தை மீறி சட்ட விரோதமாக ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரொருவருக்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதம், அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி, நேற்று புதன்கிழமை (10) விதித்துள்ளார்.
 
அக்கரைப்பற்று பொலிஸாரால் குறித்த நபர், செவ்வாய்க்கிழமை (09) கைதுசெய்யப்பட்டார்.
 
சந்தேகநபரை, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி முன்னிலையில் (நேற்று) ஆஜர்செய்த போது 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X