2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

ஆற்றுமண் ஏற்றியவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

சட்டவிரோதமாக ஆற்றுமண் அகழ்ந்து உழவு இயந்திரத்தில் ஏற்றிய குற்றச்சாட்டில் 26 வயதுடைய சாரதியை அம்பாறை, கண்ணகிபுரம் கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், உழவு இயந்திரத்துடன், அம்மண்ணையும் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று தேடுதல் நடத்தியபோது, உழவு இயந்திரத்தில் மண் ஏற்றப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் பிணையில் விடுவித்துள்ள இந்நபரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் பணித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X