2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஆற்று மண் ஏற்றியவர்களுக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 ஜனவரி 04 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா
 
அக்கரைப்பற்று பிரதேசத்தில் அனுமதிப்பத்திரத்தை மீறி சட்டவிரோதமாக ஆற்று மண் ஏற்றிய குற்றஞ்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய திருமதி என். கந்தசாமி, இன்று திங்கட்கிழமை (04) திங்கட்கிழமை தீர்ப்பளித்தார். 
 
சந்தேகநபர்கள், அக்கரைப்பற்று பொலிஸாரால் கடந்த 28ஆம் திகதி திங்கட்கிழமை கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
இவ்வழக்கு விசாரணை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய திருமதி என்.கந்தசாமி, முன்னிலையில் இன்று (04) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X