Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 ஜனவரி 25 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் கடந்த 02 நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அறுவடை செய்யப்படவிருந்த நெல் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மக்களின் இயல்பு வாழ்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, பொத்துவில், திருக்கோவில், லகுகல, பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நட்பிட்டிமுனை, நாவிதன்வெளி மற்றுமு; மருதமுனை ஆகிய பிரதேசங்களிலுள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நெல் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து பெய்துவரும் மழையினால் அநேகமான உள் வீதிகள் நீரில் மூழ்கியுள்ள தோடு, உள்ளூர் போக்குவரத்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதோடு மாணவர்களும் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்கொண்டுள்ளனர்.
மாலை வேளையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்கின்றது. கடல் கொந்தளிப்பாக இருப்பதனால் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் கடற்றொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நன்னீர் மீன்பிடித் தொழிலும் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளதுடன், அன்றாட தொழிலாளர்களின் நாளாந்த தொழில் நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago