Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூன் 06 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா,ரீ.கே.றஹ்மத்துல்லா
பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்த ஐந்து உணவகங்களுக்கு தலா 6,000 ரூபாய் படி அபராதம் விதித்ததுடன், இரண்டு உணவகங்களை இரு வாரங்களுக்கு மூடுமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக், இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இரு வாரங்களுக்கு மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ள உணவக உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய உணவகங்களை சுத்தப்படு;த்தி நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட உணவகங்களில் கடந்த சனிக்கிழமை (04) பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது, பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்ததாக இனங்கானப்பட்ட ஏழு உணவகங்களுக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .