2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான எச்.எம்.எம்.பஸீல் இன்று  வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

விற்பனைக்காக அக்கரைப்பற்று வடிகான் வீதியில் கஞ்சா வைத்திருந்த இவர்கள் இருவரும் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் மீது  ஏற்கெனவே இரண்டு முன் குற்றங்கள் நீதிமன்றத்தில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .