Freelancer / 2022 மே 17 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
அம்பாறை - சாய்ந்தமருது பிரதேசத்தில் இரண்டு கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சாய்ந்தமருது, ஜூம்மா பள்ளிவாசலுக்குச் சொந்தமான கடைத்தொகுதியில் இரண்டாம் இலக்கக்கடை மற்றும் 12ஆம் இலக்கக் கடைகள் உடைக்கப்பட்டு பணமும் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.
ஒரு கடைக்குள் இருந்த 57,000 ரூபாய் பணமும், பல பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ள நிலையில், மற்றைய தேனீர்க்கடை உடைக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் பொருட்கள் ஒன்றும் களவாடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (R)
2 hours ago
2 hours ago
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
01 Feb 2026