2025 ஜூலை 03, வியாழக்கிழமை

இரத்ததான நிகழ்வு

Gavitha   / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்

கல்முனை நகர் லயன்ஸ் கழகமும் பாண்டிருப்பு விளையாட்டுக்கழகமும் கல்முனை ஆதாரவைத்தியசாலையுடன் இணைந்து இரத்ததான நிகழ்வு ஒன்றை இன்று சனிக்கிழமை (24)  பாண்டிருப்பு மாகாவித்தியாலயத்தில் நடத்தின.

இதன்ஆரம்ப நிகழ்வு, காலை 8 மணிக்கு கல்முனை லயன்ஸ் கழகத்தின் தலைவர் பிரதேசசெயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் மற்றும் பாண்டிருப்பு விளையாட்டுக்கழகத் தலைவர் தேசமான்ய எஸ்.சிறிரங்கன் ஆகியோரின் கூட்டுத்தலைமையில் இடம்பெற்றது.

இதில் கிழக்குமாகாணசபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் கல்முனை ஆதாரவைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவின் பொறுப்பாளர் வைத்தியர் என்.ரமேஸ். லயன்ஸ் கழகத்தின் பிரதம செயலாளர் கே.செல்வேந்திரன் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.விஜரெத்தினம் உட்பட பலர் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .