2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

உள்ளூர்த்துப்பாக்கி வெடிப்பு; இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 மே 03 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் வம்மியடி காட்டுப் பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை அதிகாலை தற்செயலாக உள்ளூர்த் துப்பாக்கியொன்று வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வேட்டைக்குச் சென்ற  36, 41 வயதுடைய இரண்டு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விநாயகபுரம், சின்னத்தோட்டத்தைச் சேர்ந்த சிவகுரு உதயகுமார் (வயது 35) என்பவரே இந்தச் சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

மேற்படி காட்டுப்பகுதிக்கு திங்கட்கிழமை (02) இரவு நான்கு பேரைக் கொண்ட குழுவினர் வேட்டையாடுவதற்குச் சென்றுள்ளனர். இதன்போது, மிருகம் ஒன்றுக்கு துப்பாக்கியால் சுடுவதற்கு முற்பட்ட வேளையில் அத்துப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்த சிவகுரு உதயகுமார் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X