2025 மே 21, புதன்கிழமை

காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி

Kogilavani   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு, எஸ்.ஜமால்டீன்

அம்பாறை, அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பிரதேசத்தில்  புதன்கிழமை காலை 5.30 மணியளவில் யானை தாக்குதலுக்குள்ளான விவசாயி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு 09ஆம் பிரிவைச் சேர்ந்த கமர்;தீன் என்றழைக்கப்படும் அகமதுலெவ்வை அப்புதுல் கபூர் (வயது 66) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இவர் வயல் வேலைக்காக அம்பாறை- அக்கரைப்பற்று வீதியிலிருந்து நான்காம் கட்டை வீதியூடாக சென்றபோது காட்டு யானை தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X