2025 ஜூலை 14, திங்கட்கிழமை

காணி உறுதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட நடவடிக்கை

Sudharshini   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

அம்பாறை மாவட்டத்துக்குட்பட்ட ஆலம்குளம் கரும்பு செய்கை காணி உரிமையாளர்கள் தங்களின் காணி உத்தரவாத பத்திரத்தை, உறுதியாக மாற்றித்தரக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை எதிர்வரும் வியாழக்கிழமை (10) முன்னெடுக்க உள்ளதாக ஆலம்குளம் கரும்பு செய்கைக்குழு விவசாய அமைப்பின் செயலாளர் யூ.கே.சம்சுதீன் இன்று (08) தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தை அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்  இதில் 5000ற்கும் மேற்பட்டடோர் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 30 வருடங்களாக கரும்பு செய்கை காணி உரிமையாளர்கள், தங்களின் உத்தரவாத பத்திரத்தை உறுதியாக மாற்றித் தரக்கோரி,  முன்னார் இருந்த அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்து வந்துள்ளதாகவும் அதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்டி மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாகவும் ஆலம்குளம் கரும்பு செய்கைக்குழு விவசாய அமைப்பின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .