Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜனவரி 12 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா,ரீ.கே.றஹ்மத்துல்லா
மீன்பிடித் தொழிலுக்காகச் சென்று காணாமல் போன ஏனைய 4 மீனவர்களும் படகுடன் இன்று (12) அதிகாலை மாலைதீவுக் கரையோரப் பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இத்தகவலை மாலைதீவுக்கான இலங்கைத் தூதுவர் தன்னுடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தியதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கடந்த டிசெம்பர் 24ஆம் திகதி கல்முனையைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்காக ஒலுவில் துறைமுகத்திலிருந்து 2 இயந்திரப் படகுகளில்; கடலுக்குச் சென்றிருந்தனர்.
இதன்போது, 6 மீனவர்களும் காணாமல் போன நிலையில், இவர்களில் இருவர் படகு ஒன்றுடன் கடந்த 05ஆம் திகதி மாலைதீவுக் கடற்பரப்பில் அந்நாட்டுக் கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், ஏனைய 4 மீனவர்களையும் தேடி வந்தபோது, அவர்களும் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே மீட்கப்பட்ட 2 மீனவர்களையும் புதன்கிழமை (11) நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், அவர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி அடையாமை காரணமாக அவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை.
ஆகவே, ஏற்கெனவே மீட்கப்பட்ட 2 மீனவர்களுடன் ஏனைய 4 மீனவர்களையும் சேர்த்து அழைத்து வருவதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago
02 May 2025