2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

க.பொ.த உ/த மாணவர்களுக்கு நாளை மறுதினம் பைஸர்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 19 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாணத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் கல்வி கற்கும் 18, 19 வயது மாணவர்களுக்கு, நாளை மறுதினம் (21) பைஸர் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

க.பொ.த உயர்தர பரீட்சை எழுதி பாடசாலைகளை விட்டு வெளியேறியவர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியூர், வெளி மாவட்டங்களில் கல்வி பயிலும் மாணவர்கள், தங்களுக்கு அண்மையில் உள்ள பாடசாலைக்குச் சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .