2025 ஜூன் 25, புதன்கிழமை

கையெழுத்து வேட்டை

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு,வடிவேல் சக்திவேல்  

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி அம்பாறை, திருக்கோவில் -தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக  கையெழுத்து வேட்டை இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தக் கையெழுத்து வேட்டையில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை களுவாஞ்சிக்குடியிலும் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக் குழுவின் அம்பாறை மாவட்டத் தலைவர் செல்லையா இராசையா தெரிவிக்கையில், 'சர்வதேச விசாரணை தேவையென்பதை வலியுறுத்தி இக்கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொடூர யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு அரசியல் மற்றும் பொருளாதார தீர்வு இதுவரையில் கிடைக்காமையை எடுத்துக்கூறி, நியாயமான தீர்வை கிடைக்கச் செய்யவேண்டும்' எனத் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .