2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கேரள கஞ்சாவுடன் இளைஞன் கைது

Princiya Dixci   / 2016 மே 06 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். ஜமால்டீன்

அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (05)  இரவு கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 4 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அக்கரைப்பற்றுப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஒலுவில்-7ஆம் பிரிவைச் சேர்ந்த குறித்த இளைஞனிடம் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து இளைஞன் கைதுசெய்யப்பட்டார் எனவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். 

கைதுசெய்யப்பட்ட 19 வயது இளைஞன், விசாரணையின் பின் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X